இந்தியா
ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்!

ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அவர் எழுதிய கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 கடற்றொழிலாளர்கள் நேற்றுமுன்தினம் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, தமிழக முதல்வர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.