இலங்கை
ஆபாச வார்த்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

ஆபாச வார்த்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
இலங்கை பொலிஸ் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் கருத்துகள் மற்றும் விமர்சனங்களை கவனத்தில் கொண்டு, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் செயல்படுத்துவதாக பொலிஸ் பிரிவு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
ஆகவே இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள கண்ணியமான மொழியைப் பயன்படுத்துமாறு பொலிஸ் திணைக்களம் கேட்டுக் கொண்டது.
ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவது கருத்து தெரிவிப்பவரின் குணத்தை மட்டுமே சேதப்படுத்தும் என்று சுட்டிக்காட்டிய பொலிஸ் திணைக்களம், எதிர்காலத்தில் அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.