Connect with us

சினிமா

நிதீஷின் செயலால் மயங்கிவிழுந்த ஈஸ்வரி! பிளவடைந்த குடும்பம்; கேள்விகுறியில் இனியா வாழ்க்கை

Published

on

Loading

நிதீஷின் செயலால் மயங்கிவிழுந்த ஈஸ்வரி! பிளவடைந்த குடும்பம்; கேள்விகுறியில் இனியா வாழ்க்கை

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா சுதாகர் வீட்ட வந்து நிதீஷ் விஷயமா யாருகிட்டயாவது பேசினீங்களா என்று கேட்கிறார். அதுக்கு சுதாகர் நிதீஷ் கூட இருந்த பசங்க தப்பா ஏதோ பாவிச்சிருக்காங்க போல அதுதான் பொலீஸ் நிதீஷையும் கூட்டிட்டு போயிருக்காங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து பாக்கியா சுதாகரைப் பாத்து நான் இன்னும் இனியா கிட்ட இந்த விஷயத்தை சொல்லல என்கிறார்.அதுக்கு சுதாகர், இனியா கிட்ட இப்போதைக்கு சொல்லிடாதீங்க அவளுக்கு தெரிஞ்சால் ரொம்பவே வருத்தப்படுவாள் என்கிறார். பின் சுதாகர் பாக்கியாவப் பாத்து உங்க மருமகன் தப்பு பண்ணியிருக்க மாட்டான் என்று நீங்க நினைக்கிறீங்க தானே… அவ்வளவும் போதும் நான் பாத்துக்கிறேன் என்று சொல்லுறார்.அதனை அடுத்து நிதீஷை இண்டைக்கு அரெஸ்ட் பண்ணிட்டாங்க என்ற விஷயம் இனியாவுக்கும் கோபிக்கும் தெரியவருது. அதைக் கேட்டவுடனே கோபி இதுக்கு தான் அவன் கூட இருக்க வேணாம் என்று சொன்னேன் என்கிறார். அதுக்கு இனியா இண்டைக்கு கூட ஏன் இப்புடி எல்லாம் கதைக்கிறீங்க என்று கேட்டதற்கு என்னை தள்ளிவிட்டார் என்று கோபிக்குச் சொல்லுறார். இதைக் கேட்டவுடனே கோபி ரொம்பவே கோபப்படுறார்.பின் கோபி இனியாவை பாக்கியா வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போறார். அதைப் பார்த்த ஈஸ்வரி இங்க வந்த விஷயத்தை சுதாகர் வீட்ட சொல்லு என்கிறார். அதுக்கு சுதாகர் இனிமேல் இனியாவிற்கு இதுதான் வீடு என்கிறார். பின் பாக்கியா தானும் நிதீஷை அரெஸ்ட் பண்ணத பார்த்தேன் என்கிறார். இதனை அடுத்து வீட்டில இருக்கிற எல்லாரும் நியூஸில பாத்திட்டு ஷாக் ஆகுறார்கள். பின் ஈஸ்வரி மயக்கம் போட்டு கீழே விழுகிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன