Connect with us

இலங்கை

இரண்டு மாடி வீட்டில் இடம்பெற்ற சட்டவிரோத செயல் ; பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்

Published

on

Loading

இரண்டு மாடி வீட்டில் இடம்பெற்ற சட்டவிரோத செயல் ; பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்

கட்டான பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இரண்டு மாடி வீடு ஒன்றில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் திடீர் சோதனையின் போது குறித்த கைது நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சோதனையின் போது வீட்டில்  மது காய்ச்சப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை போலீசார் விசாரித்தபோது, இந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி சிறிது காலமாக நடந்து வருவது தெரியவந்துள்ளது. 

 ஆரம்ப கட்ட விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீரிகம பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இந்த இரண்டு மாடி கட்டிடத்தை மாதத்திற்கு 60,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்ததாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

மினுவாங்கொட, நத்தபொல, நில்பனகொட, கட்டுவெல்லாகம, ஹப்புவலன மற்றும் மரதகஹமுல ஆகிய பிரதேசங்களுக்கு இந்த சட்டவிரோத மதுபானம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

சட்டவிரோத மதுபானத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 400,000 ரூபாய் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட எட்டு பீப்பாய் சட்டவிரோத மதுபானம், ஒரு கோடா, ஒரு சுருள், 03 எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் ஒரு தண்ணீர்

மோட்டார் ஆகியவற்றுடன் சந்தேக நபர் இன்று (04) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன