இலங்கை
கொழும்பில் நடிகர் ஷாருக்கான் கலந்துக்கொள்ளும் விழா ; மக்களே ஏமாறவேண்டாம்!

கொழும்பில் நடிகர் ஷாருக்கான் கலந்துக்கொள்ளும் விழா ; மக்களே ஏமாறவேண்டாம்!
ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறும் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் கலந்துக்கொள்ளும் பிரம்மாண்டமான திறப்பு விழாவிற்கான அங்கீகரிக்கப்படாத டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவது குறித்து சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீ லங்கா (City of Dreams Sri Lanka) நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிகழ்வுக்கு அழைப்பிதழ்கள் மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் தரப்பினருக்கும் டிக்கெட்டுகளை வழங்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்கவோ அதிகாரம் இல்லை என்றும் ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்தினர்.
“அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்கள் மூலம் போலி டிக்கெட்டுகள் வழங்கப்படுவது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அத்தகைய சலுகைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துல்லியமான தகவலுக்காக தங்கள் அதிகாரப்பூர்வ தொடர்பு வழிகள் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியது.