Connect with us

இலங்கை

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து கோர விபத்து; 21 பேருக்கு நேர்ந்த கதி

Published

on

Loading

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து கோர விபத்து; 21 பேருக்கு நேர்ந்த கதி

 யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச. பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

சிலாபம் – புத்தளம் வீதியில் தெதுறு ஓயா பாலத்துக்கு அருகில் பேருந்து விபத்த்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இந்த பஸ் விபத்து இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திடீரென பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்து தெதுரு ஓயாவிலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பெரிய மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

சம்பவ இடத்தில் கூடியிருந்த மக்களின் மிகுந்த முயற்சிக்குப் பின்னர் காயமடைந்தவர்கள் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் 21 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காகச் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன