Connect with us

இலங்கை

வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Published

on

Loading

வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இணைவழி ஊடாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறும் அமைப்பு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

ஜூலை 3 ஆம் திகதி முதல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

அத்துடன் குறித்த சேவைகள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை செயலிழந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலிழப்பை மீளமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன