Connect with us

இலங்கை

நாட்டில் பொலிஸ் பிரிவில் தற்போது 28,000 வெற்றிடங்கள்

Published

on

Loading

நாட்டில் பொலிஸ் பிரிவில் தற்போது 28,000 வெற்றிடங்கள்

பொலிஸ் பிரிவில் தற்போது 28,000 வெற்றிடங்கள் இருப்பதாகத் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்

ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Advertisement

இன்று (08) நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தற்போது பொலிஸ் அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறியுள்ளார்.

அதன்படி, பொலிஸ் சேவையில் 5,000 வெற்றிடங்களை அவசரமாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், 5,000 கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

Advertisement

இதற்கிடையில், விசாரணையிலுள்ள 1,500 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன