வணிகம்
பெர்சனல் லோனுக்கு 9% வட்டி; ரூ. 10 லட்சத்திற்கு இவ்வளவு இ.எம்.ஐ செலுத்தினால் போதும்; இந்த வங்கியை நோட் பண்ணுங்க மக்களே

பெர்சனல் லோனுக்கு 9% வட்டி; ரூ. 10 லட்சத்திற்கு இவ்வளவு இ.எம்.ஐ செலுத்தினால் போதும்; இந்த வங்கியை நோட் பண்ணுங்க மக்களே
ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு இதுவரை ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள், அதாவது 1% குறைத்துள்ளது. இதனால், வணிக வங்கிகள் இப்போது ரிசர்வ் வங்கியிடமிருந்து மலிவான கடன்களை பெறுகின்றன. இதனை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக, பல வங்கிகள் தங்கள் கடன் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன.தற்போது, தனிநபர் கடனை 9% என்ற வட்டி விகிதத்தில் பெற முடியும். இருப்பினும், அனைத்து வகையான கடன்களிலும் தனிநபர் கடன்கள் அதிக வட்டி விகிதங்களில் ஒன்றாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, வேறு வாய்ப்பு இல்லாத போது மட்டுமே தனிநபர் கடனை பெறுவது நல்லது.தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, எப்போதும் செயலாக்கக் கட்டணத்தை சரிபார்க்கவும். சில வங்கிகள் அதிக செயலாக்க கட்டணங்களை வசூலிக்கின்றன.தனிநபர் கடன்களுக்கு எந்தெந்த வங்கிகள் குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன என்று இப்போது பார்ப்போம்.9% வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் – பேங்க் ஆஃப் மகாராஷ்டிராபேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 9% முதல் 10.80% வரையிலான வட்டி விகிதங்களில் தனிநபர் கடன்களை வழங்குகிறது. இது ஒரு பொதுத்துறை வங்கி என்பதால், தகுதியான வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. 9% என்ற குறைந்தபட்ச வட்டி விகிதத்தைப் பெற, நீங்கள் சில குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.9% வட்டி விகிதத்தைப் பெற தகுதியானவர்கள் யார்?9% தனிநபர் கடன் வட்டி விகிதத்திற்கு தகுதி பெற, உங்கள் சிபில் ஸ்கோர் 800 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். மேலும், நீங்கள் மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனம் அல்லது அரசு கல்வி நிறுவனத்தில் பணிபுரிபவராக இருக்க வேண்டும். அத்துடன், நீங்கள் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் சம்பளக் கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தால், 9% என்ற குறைந்த வட்டி விகிதத்தில் கடனைப் பெறலாம்.சிபில் ஸ்கோரின் அடிப்படையில் வட்டி விகிதங்கள்உங்கள் சிபில் ஸ்கோர் 776 முதல் 799 வரை இருந்தால், வங்கி உங்களுக்கு 9.3% வட்டி விகிதத்தில் தனிநபர் கடனை வழங்கும். 750 முதல் 775 வரையிலான ஸ்கோருக்கு, வட்டி விகிதம் 9.8% ஆக இருக்கும். கடன் தொகையில் 1% செயலாக்கக் கட்டணமாக ஜி.எஸ்.டி-யுடன் வசூலாகும்.மற்ற வங்கியில் சம்பளக் கணக்கு இருந்தால் என்ன செய்வது?உங்களுக்கு பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் சம்பளக் கணக்கு இல்லையென்றால், வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும். சிபில் ஸ்கோர் 800 மற்றும் அதற்கு மேல் இருந்தால், வட்டி விகிதம் 9.8% ஆக இருக்கும். 776 முதல் 799 வரை இருந்தால் 10.3% ஆகவும், 750 முதல் 775 வரை இருந்தால் 10.8% ஆகவும் இருக்கும்.தேவையான வருமானம் மற்றும் வயதுவங்கியிலிருந்து தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்க, உங்கள் ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் ரூ. 3 லட்சம் இருக்க வேண்டும். உங்கள் வயது 21 முதல் 58 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். கடன் திருப்பிச் செலுத்தும் காலம் உங்கள் ஓய்வு பெறும் வயதிற்கு (பொதுவாக 60 ஆண்டுகள்) மிகாமல் இருக்க வேண்டும்வெவ்வேறு வங்கிகளின் குறைந்தபட்ச வட்டி விகிதங்கள்சில முக்கிய வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன்களின் குறைந்தபட்ச வட்டி விகிதங்கள்:பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா: 9.00%இந்தியன் வங்கி: 9.00%ஆக்சிஸ் வங்கி: 9.99%ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி: 9.99%எஸ்.பி.ஐ: 10.30%ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி: 10.80%ஹெச்.டி.எஃப்.சி வங்கி: 10.90%ரூ.10 லட்சம் கடனுக்கு 5 ஆண்டுகளுக்கு இ.எம்.ஐ. எவ்வளவு?நீங்கள் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் இருந்து ரூ.10 லட்சம் தனிநபர் கடனை 9% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்குப் பெற்றால், உங்கள் மாதாந்திர இ.எம்.ஐ. ரூ.20,758 ஆக இருக்கும். 5 ஆண்டுகளில் செலுத்தப்படும் மொத்த வட்டி ரூ.2,45,501 ஆகும்.வட்டி விகிதம் 9.8% ஆக இருந்தால், உங்கள் இ.எம்.ஐ. ரூ.21,149 ஆகவும், செலுத்தப்படும் மொத்த வட்டி ரூ.2,68,926 ஆகவும் இருக்கும்.