இலங்கை
வெற்றி வாகை சூடியது இலங்கை அணி ! பங்களாதேஷை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது

வெற்றி வாகை சூடியது இலங்கை அணி ! பங்களாதேஷை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
பல்லேகல மைதானத்தில் இன்று (08) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Kusal Mendis அதிகபட்சமாக 124 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Charith Asalanka 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Taskin Ahmed மற்றும் Mehidy Hasan Miraz தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் 286 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 39.4 ஓவர்கள் நிறைவில் 186 ஓட்டங்களை பெற்ற நிலையில், சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Towhid Hridoy அதிகபட்சமாக 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Asitha Fernando மற்றும் Dushmantha Chameera தலா 03 விக்கெட்டுக்களையும், Dunith Wellalage மற்றும் Wanindu Hasaranga தலா 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.