இலங்கை
நிறுத்தப்படும் செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள்

நிறுத்தப்படும் செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள்
செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளின் 14ஆம் நாள் இன்று (09) யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.
முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களை உள்ளடக்கி மொத்தம் 23 நாட்கள் அகழ்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன.
இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 54 முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகள் நாளை (10) மதியத்துடன் தற்காலிகமாக நிறைவடையவுள்ளன.