இலங்கை
செம்மணிப் புதைகுழி அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்!

செம்மணிப் புதைகுழி அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்!
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று வியாழக்கிழமை(10) மதியத்துடன் தற்காலிகமாக நிறைவடையவுள்ளன.
இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளின் 14ஆம் நாளான நேற்று புதன்கிழமை (09) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.
முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களை உள்ளடக்கி மொத்தமாக 23 நாட்கள் அகழ்வுப் பணிகள் நடைபெற்ற நிலையில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 54 முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.