இலங்கை
முதியவர் செய்த தவறான செயலால் பரபரப்பு ; இராணுவத்தினரால் காப்பாற்றப்பட்ட உயிர்

முதியவர் செய்த தவறான செயலால் பரபரப்பு ; இராணுவத்தினரால் காப்பாற்றப்பட்ட உயிர்
மாத்தறை மகாநாம பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற 94 வயது முதியவரை, துரிதமாக செயல்பட்ட இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (10) பிற்பகல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு முயன்ற நபர் உடனடியாக கண்காணிப்புப் படையினரால் மீட்கப்பட்டு மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.