Connect with us

இலங்கை

இளைஞன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு ; தீவிரமாகும் விசாரணை

Published

on

Loading

இளைஞன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு ; தீவிரமாகும் விசாரணை

கொஸ்கொட பகுதியில் இன்று (11) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கொஸ்கொட பொலிஸ் பிரிவின் ஹதரமங்ஹந்திய பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலப்பிட்டிய பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர் முச்சக்கர வண்டியின் சாரதி என்றும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ அல்லது சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களோ இதுவரையில் வௌியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

சம்பவம் குறித்து கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன