இலங்கை
போதைப்பொருளுக்காக ஏற்பட்ட தகராறு – உயிர் பலி!

போதைப்பொருளுக்காக ஏற்பட்ட தகராறு – உயிர் பலி!
காலி – கிங்தொட்ட பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிங்தொட்ட- குருந்துவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் பொதி ஒன்றுக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.