சினிமா
காசுக்காக இதை பண்ணேன்னு சொல்றாங்க!! மகள் திருமணத்திற்கு பின் கிங்காங் வேதனை

காசுக்காக இதை பண்ணேன்னு சொல்றாங்க!! மகள் திருமணத்திற்கு பின் கிங்காங் வேதனை
தமிழ் சினிமாவில் 80களில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருபவர் தான் கிங்காங் என்கிற சங்கர். உயரம் குறித்த ஏளன பேச்சுக்களை கண்டுக்கொள்ளாமல் ரஜினி, கமல், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார் கிங்காங்.கடந்த சில மாதங்களாக தன்னுடைய மகள் கீர்த்தனா – நவீன் திருமணத்திற்காக வரவேற்கை சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வீட்டுக்கு சென்று பத்திரிக்கை வழங்கி வந்தார்.ஜூலை 10 ஆம் தேதி, கிங்காங் மகள் கீர்த்தனாவுக்கும் நவீன் என்பவருக்கு பிரம்மாண்ட முறையில் திருமணத்தை நடத்தி முடித்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றார்.இந்நிலையில் பிரபலங்களுக்கு பத்திரிக்கை கொடுத்தது, பணத்திற்காகத்தான் என்று சிலர் விமர்சித்திருப்பது குறித்து கிங்காங் சங்கர் மறுத்துள்ளார். அதில், நான் எல்லோருக்கும் என் மகள் கல்யாணப்பத்திரிக்கை கொடுத்தது, பணத்திற்காகத்தான் என்று சிலர் என் போஸ்டுக்கு கமெண்ட் போடுகிறார்கள்.நான் மனசாரா சொல்றேன், நான் யார்கிட்டயும் ஒரு ரூபாய் எதிர்ப்பார்த்து பத்திரிக்கை வைக்கவில்லை. எல்லாருடைய ஆசீர்வாதம் வேண்டும் என்று தான் கூப்பிட்டேன் என்று கிங்காங் தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் கிங்காங்கிற்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.