இந்தியா
இந்தியாவில் டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து!

இந்தியாவில் டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து!
இந்தியாவில் டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 05.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் இருந்த மூன்று எண்ணெய் தொட்டிகள் வெடித்து எரிபொருள் கசிவு ஏற்பட்டதை அடுத்து தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
லங்கா4 (Lanka4)
அனுசரணை