சினிமா
இருபக்கமும் நயன்தாரா மாட்டி முழிக்க இதான் காரணம்!! பிரபலம் ஓபன் டாக்..

இருபக்கமும் நயன்தாரா மாட்டி முழிக்க இதான் காரணம்!! பிரபலம் ஓபன் டாக்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா, படங்களில் நடித்துக்கொண்டே, கிடைக்கும் நேரத்தில் தன் கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார்.இதற்கிடையில் பல பிரச்சனைகளில் சிக்கி வரும் நயன்தாரா, தனுஷ் அவர்கள், அவரின் மீது வழக்கு பதிவு செய்த விவகாரம் ஒருபக்கம் பேசு பொருளாக, மற்றொரு பக்க சந்திரமுகி படக்குழுவினர் நயன் தாரா – விக்னேஷ் சிவனின் ஆவணப்படத்தின் மீது வழக்கு பதிவிடு செய்துள்ளதும் பெரியவில் பேசப்பட்டு வருகிறது.இதுகுறித்து பத்திரிக்கையாளர் பிஸ்மி, ஒருசில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், நயன் தாரா அவர்கள் சட்டப்படி தவறாக நடந்து கொண்டுள்ளார். தனுஷ் அவர்கலிடம் அனுமதி பெற்று படக்காட்சியை வைத்திருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.இவர் அனுமதியின்றி அந்த காட்சிகளை வைத்தது தனுஷுக்கு பிடிக்கவில்லை அதனால் தான் வழக்கு பதிந்தார். ஆனால், சந்திரமுகி படக்குழு, ஆவணப்படம் வெளியாகி இத்தனை மாதங்களான பின் வழக்கு பதிவு செய்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.ஒருவேளை நயன்தாராவிற்கும் சந்திரமுகி படக்குழுவினருக்கும், தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடந்திருக்கும், அது ஒத்து வரவில்லை என்றவுடன் தற்போது வழக்குப்பதிவு செய்திருக்கலாம்.எதுவாக இருந்தாலும் காப்பி ரைட்ஸ் இருப்பவரிடம் அனுமதி பெற வேண்டும் என்று சட்டம் சொல்வதால், அதை நயன் தாரா பின்பற்றவில்லை, இதுவே இந்த பிரச்சனைக்கு காரணம் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.