இலங்கை
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான மீளாய்வு விண்ணப்பங்கள் இன்று முதல்..

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான மீளாய்வு விண்ணப்பங்கள் இன்று முதல்..
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி இன்று முதல் 28 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.