Connect with us

இலங்கை

அரை நிர்வாணமாக சென்ற வெளிநாட்டுப் பெண்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Published

on

Loading

அரை நிர்வாணமாக சென்ற வெளிநாட்டுப் பெண்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

  அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதித்து பொத்துவில் நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.

26 வயதுடைய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வெளிநாட்டுப் பெண் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு நேற்று திங்கட்கிழமை (14) பிற்பகல் மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார்.

இது தொடர்பில் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான வெளிநாட்டுப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுப் பெண் தனது காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அரை நிர்வாணமாக சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

கைதான வெளிநாட்டுப் பெண் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன