இலங்கை
திசைகாட்டிக்கு ஆதரவளித்த ஆறு பேர் இடைநிறுத்தம்

திசைகாட்டிக்கு ஆதரவளித்த ஆறு பேர் இடைநிறுத்தம்
திசைகாட்டிக்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஆறு உறுப்பினர்களே இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ள கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.