Connect with us

இலங்கை

ரணசிங்க பிரேமதாசவின் மெய் பாதுகாவலரான சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஓய்வு!

Published

on

Loading

ரணசிங்க பிரேமதாசவின் மெய் பாதுகாவலரான சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஓய்வு!

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட சேவையை வழங்கிய எஸ்.எச். முபாரக்  இம்மாதத்துடன் (ஜுலை) தனது அரச சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ளார்.

1989 செப்டம்பர் 12ஆம் திகதி பொலிஸ் துறையில் இணைந்த இவர், தனது பணிக்காலத்தில் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு   மெய் பாதுகாவலராக   அமர்த்தப்பட்டார்.

Advertisement

அதிலிருந்து சிறிது காலம்  சென்ற பின்பு களுத்துறை கடுகுருந்த விசேட அதிரடிப்படை முகாமில் பயிற்சியை முடித்துவிட்டு   அதன் பின்னர்   இலங்கை பொலிஸ் கல்லூரியில் தனது  பயிற்சியை முடித்தார். 

அதன்பின்னர்  ஜனாதிபதி உயிரிழந்த  மே மாதம்  முதலாம்  திகதி  வரைக்கும்   மெய்ப்பாதுகாவலராக சேவையாற்றி விட்டு பிராந்தியங்களில் பொது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டார்.

கடுகுருந்த விசேட அதிரடிப்படை முகாம், களுத்துறை  பொலிஸ் கல்லூரி பயிற்சி வகுப்புகளை முடித்தார். இவர் சேவையின் இறுதியில் கொழும்பு தெற்கு பகுதியில் கடமை செய்துவிட்டு தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டம்   மகாஓயா , சென்றல் கேம்ப்  , கல்முனை தலைமையக   பொலிஸ் நிலையத்தில் ஏறத்தாழ  16 ஆண்டுகள் சேவையாற்றியதோடு  பெரும் குற்றப்பிரிவு  , நிர்வாகப்பிரிவு  என கடமையாற்றி   அண்மையில் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் சமுக நிர்வாகப்பிரிவு மற்றும் ரெக்கோர்ட் ரூம் போன்ற  கடமைகளை வழக்கு தொடர்பான பொறுப்புக்களில் செயற்பட்டு   தனது சேவையை நிறைவு செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன