Connect with us

இலங்கை

வடக்கின் காணி விடுவிப்பு தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் கருத்து!

Published

on

Loading

வடக்கின் காணி விடுவிப்பு தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் கருத்து!

வடக்கிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் அடுத்த அமைச்சரவையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் வழங்கிய காணொளி ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

Advertisement

யுத்தம் நிறைவடைந்த பின்னர் GPS தொழில்நுட்பத்தை மாத்திரம் பயன்படுத்தி உள்ளூர் அரச நிறுவனங்களில் ஆலோசனை இன்றி வர்தமானி அறிவுறுத்தல் ஊடாக கையகப்பட்டுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும். 

வட மாகாணத்தின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக பலாலி விமான நிலையம் மற்றும் நாகப்பட்டினம் காங்கேசன்துறை படகு சேவை விரிவாக்கம் மற்றும் மன்னார் இராமேஸ்வரம் படகு சேவைக்கான கட்டுமான பணிகளுக்கான நிதி உதவியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் வழங்க முன்வந்துள்ள போதிலும் அரசாங்கம் அது தொடர்பில் ஆரவம்  காட்டாமை உள்ளிட்ட பல விடயங்கள் அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் .- என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன