இலங்கை
வடக்குக் கடற்பரப்பில் சிவப்பு எச்சரிக்கை !

வடக்குக் கடற்பரப்பில் சிவப்பு எச்சரிக்கை !
சிலாபம் முதல் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையிலும் உள்ள பகுதிகளுக்குப் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புத் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சிலாபம் தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் காலி தொடக்கம் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோ மீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இந்தச் சந்தர்ப்பங்களில் கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். எனவே கடலுக்குச் செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.