இலங்கை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அரசியல் வாதியினாலும் எந்தவொரு வேலை வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அரசியல் வாதியினாலும் எந்தவொரு வேலை வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது
வேலை வாய்ப்புகள் யாவும் அரச வர்த்தமானியில் விண்ணப்பங்கள் பிரசுரிக்கப்பட்டு பரீட்சைகள் மற்றும் நேர்முகப்பரீட்சைகள் மூலமே தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் ஐனாதிபதி தோழர் அனுர குமார திசாநாயக்கா அவர்கள்
தெளிவாக கூறியுள்ளார் .
எனவே தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை கொச்சைப்படுத்தி அவர்களின் பெயர்களை பிழையாக்குகின்ற செயற்பாடுகளில்
ஒரு சிலர் ஈடுபடுவதாகவும்
சுய விபரக்கோவைகள் சேகரிப்பதாகவும் கேள்விபட்டேன்.
அவ்வாறு சுயவிபரக்கோவைகளை சேகரிப்பவர்களுக்கும்
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை உறுதியாக கூறுகின்றேன் …
எனவே இளைஞர்களே விழிப்பாக இருங்கள்
உங்கள் தகுதிகளுக்கான வேலை வாய்ப்புகள் நேர்மையான முறையில் உங்களை வந்தடையும் …
குறுக்கு வழிகள் உங்களை ஒரு போதும் முன்னேற்றி விடாது …
யாரிடமும் ஏமாற வேண்டாம்.
அனுசரணை