Connect with us

இலங்கை

பிள்ளையான் தயவிலேயே கிழக்கில் தே.ம.சக்தி ஆட்சி; எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு!!

Published

on

Loading

பிள்ளையான் தயவிலேயே கிழக்கில் தே.ம.சக்தி ஆட்சி; எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு!!

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் எனக் கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு அவரின் உதவியையும் பெற்றுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் அனைத்துத் தகவல்களையும் அறிந்திருந்தார் எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது தெரிவித்தார்.

Advertisement

பிள்ளையான் அவ்வாறு தகவல்களை அறிந்து வைத்திருந்தால் அது பாரதூரமான விடயம். தகவல்கள் தெரிந்தும் அவற்றை வெளிப்படுத்தவில்லையெனில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு பிள்ளையானுடனும் என்.பி.பி. யினர் பேச்சு நடத்தினார்கள். சில சபைகளில் ஆதரவும் பெற்றுள்ளனர். கள்வர்கள், மோசடியாளர்கள் எனக் கூறிய தரப்புகளுடனும் இவர்கள் ஒப்பந்தம் கைச்சாத் திட்டுள்ளனர். இரகசிய வாக்கெடுப்பு நடத்தினர். அதிகாரத்துக்காக எதையும் செய்யத் தயார் என்ற விடயத்தையே இதன்மூலம் அவர்கள் குறிப்பிடுகின்றனர்-என்றார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன