இலங்கை
பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ ; நீதிமன்றம் விடுத்த உத்தரவு

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ ; நீதிமன்றம் விடுத்த உத்தரவு
மன்னார் – தங்காலை பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ க்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அந்த பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரை பிணையில் செல்ல தங்காலை நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
சந்தேக நபர் தலா 2 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதித்த மன்று , வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.