Connect with us

இலங்கை

வெளிநாடு செல்வதற்காக போலி முகவரிடம் பணத்தை இழந்த குடும்பஸ்தர்; உயிர்மாய்ப்பு!

Published

on

Loading

வெளிநாடு செல்வதற்காக போலி முகவரிடம் பணத்தை இழந்த குடும்பஸ்தர்; உயிர்மாய்ப்பு!

வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். 

புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய செல்வராசா லிபாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் 

Advertisement

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 80 இலட்சம் ரூபா பணத்தினை கொழும்பில் உள்ள முகவரிடம் கொடுத்துள்ளார். 

இருப்பினும் அவர் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் தனது பணத்தினை மீள வழங்குமாறு தொடர்ச்சியாக முகவரிடம் கேட்டு வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பணத்தை கேட்டவேளை அந்த பணம் ஒன்லைனில் களவாடப்பட்டதாக முகவர் கூறியுள்ளார். 

இதனால்  விரக்தியில் நேற்றுமுன்தினம் இரவு (14) தற்கொலை முயட்சியில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் நேற்று காலை வாந்தி எடுத்துவிட்டு மனைவியிடம் நடந்தவற்றை கூறினார். 

Advertisement

பின்னர் அவர் புங்குடுதீவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். 

அவரது உடல் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

Advertisement

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன