Connect with us

இலங்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட டென்மார்க் பெண்

Published

on

Loading

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட டென்மார்க் பெண்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது பொதிகளில் மறைத்து வைத்திருந்த 57 மில்லியன் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை விமான நிலையத்தை விட்டு வெளியேற்ற முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு குஷ் போதைப்பொருள் கொண்டு சென்ற பெண், பின்னர் நேற்று இரவு இலங்கைக்கு வருகைத்தந்தள்ளார்.

நேற்று இரவு சுமார் 07.05 மணியளவில் இண்டிகோ விமான நிறுவனத்தின் 6.E.- 1073 விமானத்தில் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவர் கொண்டு வந்த சூட்கேஸில் 25 காற்று புகாத சிற்றுண்டிப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 05 கிலோ மற்றும் 700 கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணும் அவர் கொண்டு வந்த போதைப்பொருளும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன