இலங்கை
சர்வதேச ஆவணத்தில் இலங்கைத் தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சர்வதேச ஆவணத்தில் இலங்கைத் தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கடந்த 2019ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்த காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இறுதி யுத்தம் குறித்த தரவுகள் தொடர்பான ஆவணங்களுக்கு என்ன ஆனது என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் அரூஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
6 வருடங்களுக்கு முன் நடந்த இந்த விடயங்களுக்கு ஐ.நா அமைப்பும் அரசியல்வாதிகளும் பொறுப்புச் சொல்ல வேண்டும்.
இந்தநிலையில் தற்போது செம்மணி விவகாரத்தில் பிரித்தானிய அரசாங்கம் தலையிடுவதாக தெரிவித்திருக்கின்றது.
ஆனால் இந்த விவகாரம் தற்போது எழுந்துள்ள ட்ரம்பின் வரி விதிப்பு விவகாரத்தினால் இது உலக அரங்கிற்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பதில் ஐயம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.