Connect with us

இலங்கை

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

Published

on

Loading

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

குருணாகல் – புத்தளம் வீதியில் பாதெனிய மற்றும் அவுலேகம ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (16) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காரில் பயணித்த இருவரும் லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

Advertisement

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன