இலங்கை
யாழ்.செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி தீர்மானம் நிறைவேற்றம்

யாழ்.செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி தீர்மானம் நிறைவேற்றம்
யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி மட்டக்களப்பு மாநகரசபை கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு, சபையிலிருந்த தேசிய மக்கள் சக்தியின் 9 உறுப்பினர்கள் உட்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
இந்த யோசனையை இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் முன்மொழிந்தார்.