Connect with us

விளையாட்டு

இந்திய கபடியில் திருப்புமுனை… ‘தி கோட்’ வீரர்கள் இவங்க தான்!

Published

on

Top 5 best Indian Kabaddi players of all time Anup Kumar Ajay Thakur Rakesh Kumar Pardeep Narwal Pawan Sehrawat Tamil News

Loading

இந்திய கபடியில் திருப்புமுனை… ‘தி கோட்’ வீரர்கள் இவங்க தான்!

உலகின் பழமையான விளையாட்டுகளில் ஒன்று கபடி. எப்போதும் பரபரப்பாக ஆடப்படும் இந்தப் போட்டி தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. தமிழ் மண்ணில் இருந்து இந்தியா முழுதும் பரவிய இந்த விளையாட்டு இப்போது பல நாடுகளில் விளையாடப்படுகிறது. சர்வதேச அளவில் கபடியில் இந்தியா தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் பாணியில் தொடங்கப்பட்ட புரோ கபடி லீக் ‘கபடி’ விளையாட்டுக்குப் புதிய உயிர் கொடுத்துள்ளது எனலாம். இந்த லீக் போட்டி மூலம் பல வீரர்கள் முன்னணி வீரர்களாக உருவெடுத்து உலக அளவில் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அந்த வகையில், கபடி போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பல தசாப்தங்களாக, இந்தியாவை ஆதிக்கம் செலுத்த உதவிய சிறந்த 5 வீரர்கள் குறித்து இங்குப் பார்க்கலாம். பவன் செஹ்ராவத் இந்தியாவின் தலைசிறந்த ரைடர் மற்றும் டிஃபென்ஸ் வீரராக பவன் செஹ்ராவத் அறியப்படுகிறார். “ஹை-ஃப்ளையர்” என்று பிரபலமாக அறியப்படும் இவர் இந்திய கபடி அணியின் தற்போதைய கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2023 ஆசிய கபடி சாம்பியன்ஷிப் மற்றும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வெல்ல இந்திய அணி அழைத்துச் சென்றார். இது தவிர, அவர் 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் பங்கேற்றார். அதிலும் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இவருக்கு கடந்த 2023 இல் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.புரோ கபடி தொடரிலும் நட்சத்திர வீரராக வலம் வரும் பவன் செஹ்ராவத், சிறப்பான சாதனையைப் படைத்துள்ளார். அவர் 70 சூப்பர் 10கள் மற்றும் 44 சூப்பர் ரெய்டுகள் உட்பட 1318 ரெய்டு புள்ளிகளை எடுத்துள்ளார். கூடுதலாக, அவர் 2 ஹை 5-கள் உட்பட 70 டேக்கிள் புள்ளிகளையும் எடுத்துள்ளார். பர்தீப் நர்வால் “டப்கி கிங்” என்று அன்புடன் அழைக்கப்படும் வீரர் பர்தீப் நர்வால். மற்றொரு புகழ்பெற்ற ரைடரான இவர் 2016 கபடி உலகக் கோப்பை, 2017 ஆசிய கபடி சாம்பியன்ஷிப், 2018 துபாய் கபடி மாஸ்டர்ஸ் மற்றும் 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் உட்பட, இந்தியாவிற்காக நான்கு தங்கப் பதக்கங்களை நர்வால் வென்றுள்ளார்.தவிர, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியிலும் அவர் இருந்தார். புரோ கப்படியில் 88 சூப்பர் 10-கள் உட்பட 1800 ரெய்டு புள்ளிகளைத் தாண்டிய ஒரே வீரர் என்கிற சாதனை அவர் படைத்துள்ளார். மேலும், 82 சூப்பர் ரெய்டுகளைச் செய்துள்ளார்.ராகேஷ் குமார்இந்திய கபடி வீரர்களில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக ராகேஷ் குமார் இருக்கிறார். இந்திய அணிக்காக நீண்ட நாள் ஆடிய இவர் அற்புதமான ஆல்ரவுண்டராக இருந்தார். இந்திய கேப்டனாகவும் செயல்பட அவர் 2006, 2010 மற்றும் 2014 ஆசிய விளையாட்டு அணியில் தங்கப் பதக்கங்களை வென்ற அணியில் இருந்தார். தவிர, அவருக்கு இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணியில் அவர் இடம்பெற்றார். அவரது அசாத்திய திறனுக்காக 2011 இல் மதிப்புமிக்க அர்ஜுனா விருது பெற்றார்.பி.கே.எல் தொடக்க சீசனில் மிகவும் விலையுயர்ந்த வீரராக இருந்தார் ராகேஷ் குமார். தனது பி.கே.எல் வாழ்க்கையில், குமார் 186 ரெய்டு புள்ளிகளையும் 74 டேக்கிள் புள்ளிகளையும் பெற்றார்.அஜய் தாக்கூர்இந்தியாவின் தனித்துவமான ரைடர் அஜய் தாக்கூர். 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2018 துபாய் கபடி மாஸ்டர்ஸ் மற்றும் 2017 ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற அணியில் அவர் இருந்தார். இதேபோல், 2016 கபடி உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் வெற்றியில் அவர் மிகப்பெரிய பங்காற்றினார். அவரது சாதனைகளுக்காக 2019 ஆம் ஆண்டில் அவருக்கு அர்ஜுனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அஜய் தாக்கூர் பி.கே.எல் தொடரிலும் நட்சத்திர வீரராக ஜொலித்தார். அவர் 29 சூப்பர் 10-கள் உட்பட 794 ரெய்டு புள்ளிகளைப் பெற்றார், மேலும் 23 சூப்பர் ரெய்டுகளைச் செய்துள்ளார். தற்போது, புரோ கபடி லீக் சீசன் 12 இல் புனேரி பால்டனின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.அனுப் குமார்அனுப் குமார் கபடி விளையாட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். அவரது சாதனைகள் பல இன்றுவரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. மேலும், நீண்ட சாதனை பட்டியலை கொண்ட ஒரே வீரரும் அவரே. 2006 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், 2008 ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள், 2009 ஆசிய உட்புற விளையாட்டுப் போட்டிகள், 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2013 ஆசிய உட்புற மற்றும் தற்காப்புக் கலைப் போட்டிகள், 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2016 உலகக் கோப்பை ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்ற அணியில் குமார் இந்திய அணியில் அவர் இருந்தார்.இந்த விளையாட்டுக்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்பிற்காக 2012 இல் அர்ஜுனா விருதைப் பெற்றார். 2018 இல் தொழில்முறை கபடியில் இருந்து அனுப் ஓய்வு பெற்றார். பி.கே.எல் தொடரில், 13 சூப்பர் 10-கள் உட்பட 527 ரெய்டு புள்ளிகளைப் பெற்றார், மேலும் 17 சூப்பர் ரெய்டுகளைச் செய்தார். தவிர, 69 டேக்கிள் புள்ளிகளையும் வைத்திருந்தார். அர்ஜுனா விருது பெற்றவர், தனது வாழ்க்கையில் மற்றொரு மரியாதையை சேர்க்க, சீசன் 2 இல் யு மும்பாவுடன் பி.கே.எல் கோப்பையையும் வென்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன