இலங்கை
கண்டியில் வேன் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலி

கண்டியில் வேன் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலி
கண்டி மீமுரே வீதியில் கரம்பகெட்டிய பகுதியில் வேன் ஒன்று விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்படி விபத்தில் இதுவரை இரண்டு பெண்களும் ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இவர்கள் மீரிகம பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து 5 வயதான பிள்ளை உள்ளிட்ட மூன்று பேர் தெல்தெனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.