இலங்கை

குருநாகல் சிசுவை தத்தெடுக்க விரும்பும் ஆயிரக்கணக்கானோர்; வெளிநாடுகளில் இருந்தும் அழைப்பு

Published

on

குருநாகல் சிசுவை தத்தெடுக்க விரும்பும் ஆயிரக்கணக்கானோர்; வெளிநாடுகளில் இருந்தும் அழைப்பு

 குருநாகல், பரகஹதெனிய – சிங்கபுர பகுதியில் வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவை தத்தெடுக்க, 1,000க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து பல அழைப்புகள் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

குழந்தையைத் தத்தெடுப்பது குறித்து விசாரித்த அனைவருக்கும், தத்தெடுப்பு செயல்பாட்டில் உள்ள சட்ட நடைமுறைகள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் குழந்தையின் தாய் யார் என்பது குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version