இலங்கை
யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!

யாழில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றய தினம் நெல்லியடி விசேட அதிரடிப் படையினரால் ஓர் விசேட சுற்றிவளைப்பு ஒன்றினை நாகர் கோவில் பகுதி முழுவதும் மேற்கொள்ள பட்டது.
இச் சுற்றி வளைப்பில் பொதிகள் 40 அடங்கிய 81.300 km கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் தப்பி சென்றுள்ளார் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை