இலங்கை
அரச மரக் காப்பகத்தில் நடந்த கொடூரம் ; மேற்பார்வையாளருக்கு எமானான ஊழியர்கள்

அரச மரக் காப்பகத்தில் நடந்த கொடூரம் ; மேற்பார்வையாளருக்கு எமானான ஊழியர்கள்
சிகிரியா பகுதியில் உள்ள இனாமலுவ அரசு தேக்கு மர காப்பகத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றொருவர் படுகாயமடைந்து தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் பொல்பிதிகம, மொரகொல்லாகம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர், இவர் பணி மேற்பார்வையாளராகப் பணியாற்றினார்.
பண விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததன் விளைவாக இந்த மரணம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நான்கு பேரும் அரசு தேக்கு மரக் காப்பகத்தில் மரங்களை வெட்டுவதற்காக ஒரு ஒப்பந்ததாரரிடம் சிறிது காலமாக வேலை செய்து வந்த தொழிலாளர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.