இலங்கை
கிழக்கின் பாதுகாப்பு குறித்து இராணுவத் தளபதி – கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்
கிழக்கின் பாதுகாப்பு குறித்து இராணுவத் தளபதி – கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கும் இடையே, திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இன்று
சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு விடயங்களில் இராணுவத்தின் ஈடுபாடு மற்றும் பொதுமக்களுடனான அதன் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பல்லேகும்புர மற்றும் 22 வது காலாட்படை பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் லலித் பெரேரா ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.