இலங்கை
பிள்ளைகளின் கதறல் சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த அயலவர்களுக்கு அதிர்ச்சி!

பிள்ளைகளின் கதறல் சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த அயலவர்களுக்கு அதிர்ச்சி!
மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை குடும்பப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை அவரின் கணவனே கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று(19) மாலை வேலை முடிந்து வீட்டுக்கு மது போதையில் வந்துள்ளார்.
இதன்போது அவருக்கும் மனைவிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
போதையில் இருந்த கணவன், கொலை செய்த பின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அவரின் 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் கதறல் சத்தத்தால் வீட்டுக்கு வந்த அயலவர்கள், படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த தாயை மருத்துவமனையில் சேர்த்தனர் .
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், பிள்ளைகள் இருவரையும் பொறுப்பேற்றதுடன் தாயைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவான தந்தையைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.