Connect with us

இலங்கை

அநுர அரசின் செயற்பாடு தொடர்பில் மைத்திரியின் கருத்து!

Published

on

Loading

அநுர அரசின் செயற்பாடு தொடர்பில் மைத்திரியின் கருத்து!

சமகால அரசாங்கம் தொடர்பில் நான் ஒன்றும் கூற முடியாது. நேரடியாக தொடர்புடையவர்கள் சாதாரண மக்கள் என்பதால் அரசாங்கம் தொடர்பில் மக்களிடம் தான் அபிப்ராயம் கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (20)  ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இது தெடார்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்துள்ளது, பொருட்களின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தங்களது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்கின்றனர்.

மேலும், அரசாங்கம் பொறுப்பேற்று 7, 8 மாதங்களே கடந்துள்ள நிலையில், தற்போது எதையும் கூறுவதென்பது கடினமானது. ஒரு வருடம் கடந்த பின்னர் அவர்கள் குறித்து தெரிவிக்கலாம்.

தற்போது, எரிபொருள் மற்றும் பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரித்திருப்பதை காண முடிகின்றது. பொதுமக்கள் மிகவும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர். சாப்பிட முடியாத நிலையில் கூட மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மக்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன