இலங்கை
ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையான் தொடர்பு; விசாரணைகளைத் துரிதப்படுத்துக சரத் வீரசேகர வலியுறுத்து

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையான் தொடர்பு; விசாரணைகளைத் துரிதப்படுத்துக சரத் வீரசேகர வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தாரெனில் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சஹ்ரான் மற்றும் நௌபர் மெளலவி ஆகியோரே பிரதான சூத்திரதாரிகள். இவர்களில் சஹ்ரான் இறந்துவிட்டார். எப்.பி.ஐ. இன்டர்போல் ஆகியவற்றுக்குக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போன பிரதான சூத்திரதாரியொருவர் இருந்தால், அவர் பற்றி தகவல் வெளியிடாமல் இருப்பது ஏன்? இது பாதிக்கப்பட்டகத் தோலிக்க மக்களை அவமதிக்கும் செயல் என்றே நான் கருதுகின்றேன்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் போது ஷானி அபேசேகர சேவையில் இருந்தார். தற்போது அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, எப்படியான பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்கின்றார்கள் எனப் பொறுத்திருந்து பார்ப்போம் – என்றார்.