இலங்கை
உறங்கச் சென்றவர் சடலமாக மீட்பு!!

உறங்கச் சென்றவர் சடலமாக மீட்பு!!
உணவருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்றவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டத்தைச் சேர்ந்த மாசல் அருளானந்தம் (வயது-76) என்பவரே உயிரிழந்தவராவார்.
நேற்றுமுன்தினம் உணவருந்திவிட்டு வீட்டில் உறங்கச் சென்றவர் நேற்றுக் காலை சடலமாகக் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார்.