இலங்கை
யாழில் உணவருந்திவிட்டு உறங்க சென்றவர் சடலமாக மீட்பு

யாழில் உணவருந்திவிட்டு உறங்க சென்றவர் சடலமாக மீட்பு
யாழில் உணவருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்றவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டத்தைச் சேர்ந்த மாசல் அருளானந்தம் (வயது-76) என்பவரே உயிரிழந்தவராவார்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை உணவருந்திவிட்டு வீட்டில் உறங்கச் சென்றவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.