இலங்கை
2025 யாழ் நல்லூர் கந்தன் மகோற்சப பெருந் திருவிழா ; காளாஞ்சி கையளிப்பு

2025 யாழ் நல்லூர் கந்தன் மகோற்சப பெருந் திருவிழா ; காளாஞ்சி கையளிப்பு
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு, இன்று (21) காலை இடம்பெற்றது.
இதன்போது வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்றது.
தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கிருந்து கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இம்மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நல்லூர் கந்தனின் மகோற்சப பெருந் திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.