Connect with us

இலங்கை

இறக்குமதி வரி குறைப்பு பேச்சு இறுதிக்கட்டத்தில்; அரசாங்கம் தெரிவிப்பு

Published

on

Loading

இறக்குமதி வரி குறைப்பு பேச்சு இறுதிக்கட்டத்தில்; அரசாங்கம் தெரிவிப்பு

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இறக்குமதி வரிக் குறைப்புத் தொடர்பான விவாதம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அண்மையில் மெய்நிகர் சந்திப்பொன்று நடைபெற்றது என்றும், அதில் விரிவான திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது என்றும் தொழில் அமைச்சரும், பொருளாதார மேம்பாட்டுப் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Advertisement

இலங்கை தற்போது அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வரியை 30 சதவீதமாகக் குறைக்க முடிந்துள்ளது. அதைமேலும் குறைப்பதற்காக அமெரிக்க நலன்களுக்கு இடமளித்து வர்த்தக இடைவெளியைக் குறைக்க இலங்கையும் சில சமரசங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அமெரிக்கப் பொருள்களுக்கான சுங்க வரிகளை நீக்குதல், இலங்கைக்கான இறக்குமதிகள் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது என்றும் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன