இலங்கை
ஊழல், மோசடி குவியும் முறைப்பாடுகள்!!

ஊழல், மோசடி குவியும் முறைப்பாடுகள்!!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 2 ஆயிரத்து 138 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அந்த முறைப்பாடுகளில் 44 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு 31 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பாடசாலை அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், அதிகாரிகள் போன்றவர்களும் அடங்குகின்றனர் என்று இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.