இலங்கை
ஏழுமாத காலப்பகுதிக்குள் சிக்கிய அரச அதிகாரிகள்!

ஏழுமாத காலப்பகுதிக்குள் சிக்கிய அரச அதிகாரிகள்!
கடந்த ஏழுமாத காலப்பகுதிக்குள் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் அரசாங்க அதிகாரிகள் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நடப்பு ஆண்டின் தற்போது வரையான ஏழுமாத காலப்பகுதிக்குள் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கான விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் 44 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன் மூலம் 31 அரசாங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பாடசாலை அதிபர்கள், காவல்துறையினர் உத்தியோகத்தர்கள், தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் உள்ளடங்கியுள்ளனர்.