இலங்கை
கொழும்பில் கின்னஸ் நோக்கி புதிய கட்டிடத் திட்டம்!

கொழும்பில் கின்னஸ் நோக்கி புதிய கட்டிடத் திட்டம்!
கொழும்பு துறைமுக நகரத்தில் புதிய க்ளோத்ஸ் பின் டவர்ஸ் (Clothes pin Towers) திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
உலகின் மிகப்பெரிய கட்டிடக் கலைப் படைப்பாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடிக்க இந்தத் திட்டம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
லண்டனில் உள்ள பிக் பென்னை விட பெரிய கடிகாரத்தை நிர்மாணிப்பதன் மூலம் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அங்கு 15 மீட்டர் உயரம் கொண்ட ஒரு பிரமாண்டமான கடிகாரம் கட்டப்படவுள்ளது.
இந்த மேம்பாட்டுத் திட்டம் 24,324 சதுர மீட்டரில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக 280 ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.