இலங்கை
தேசபந்து தென்னகோன் குற்றவாளி – சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

தேசபந்து தென்னகோன் குற்றவாளி – சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!
தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று விசாரணைக் குழு ஒருமனதாக முடிவு செய்து, அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளது.
பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த அறிக்கை மீதான விவாதம் விரைவில் இடம்பெறுமென்றும் அதுபற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று தெரிவித்தார்
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு.