Connect with us

இலங்கை

வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்; மஹர பள்ளிவாசல் திறக்கப்படாது

Published

on

Loading

வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்; மஹர பள்ளிவாசல் திறக்கப்படாது

  மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

எனவே அந்த பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என நீதி,சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

Advertisement

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.யான மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

மஹர சிறைச்சாலை வளவில் காணப்பட்ட பள்ளிவாசலுக்கு சட்டவிரோதமான பாதைகள் உடாக வெளியாட்கள் நுழைந்தனர்.

Advertisement

இதன்போது சிறையில் இருப்பவர்களுக்கு செல்போன்கள், போதைப் பொருட்கள் போன்றவை வீசப்பட்டன.

அதேநேரம் இஸ்லாமிய ஒருவர் இறக்கும் போதும் விவாக நிகழ்வுகளின் போதும் பலர் இந்த பள்ளிவாசலுக்கு வந்ததனால் அதிகாரிகள், கைதிகளினதும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

இதனையடுத்து அப்போதைய சிறைச்சாலை அத்தியட்சகரினால் பள்ளிவாசல் மூடப்பட்டது.

Advertisement

இந்த பள்ளிவாசலை மீண்டும் திறந்தாள் அதே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மீண்டும் ஏற்படும்.

எனவே பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என அமைச்சர் கூறினார்.

அதேவேளை சிறைச்சாலைக்கு சொந்தமான 5 பேர்ச்சஸ் காணி அங்குள்ளது.

Advertisement

தேவையானால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு அந்தக் காணியை வழங்க நடவடிக்கை எடுப்போம்.
ஆனால் மஹர சிறைச்சாலை வளவினுள் காணப்படும் பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன